புதன், 31 மார்ச், 2010

யார்?



பால்வண்ணக் கிளிஞ்சலுக்குள்
     முத்தினை வைத்தது யார்?
வான கரு மேகங்களுள்
     கூர் வாள் மின்னலினைச் சேமித்தது யார்?
உன் கருவிழிப் பார்வைக்குள்
     ஈர்ப்பு விசை வைத்தது யார்?
என் இருதயக்கூட்டுக்குள்
     உன் நினைவுகளைத் தைத்தது யார்?

கல்லுளிச் சிற்பியின் கண்ணில்
     கல்லுக்குள் கலைமகளைக் காட்டியது யார்?
பச்சை மர வேருக்கு
     நில நீரின் வழிதனைச் சேர்த்தது யார்?
என் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும்
     நீ என்னவளெனச் சொல்லியது யார்?
உன் அசைவுகள் ஒவ்வொன்றையும்
     காதல் காவியமாய்க் காட்டியது யார்?

கைப்பிடி



கரங்களை விரித்துக்
காத்திருக்கிறேன்
உன் கரங்களைக்
     கைப் பிடிக்கவே!

செவ்வாய், 30 மார்ச், 2010

தொடர்வண்டிப் பயணம்...













தொடர்வண்டிப் பயணம்,
மழை பெய்யும் தருணம்,
தனிமையில் சில நிமிடம்
எனக்குள்ளே சில ஞாபகம்.
மரங்கள், வீடுகள், குளங்கள் யென
உலகமே பின்னுக்குத் தள்ளபட
தொடர்வண்டியோ என்னை
முன்னே செலுத்திச் செல்ல
என் மனம் மட்டும் ஏனோ
     நினைவுகளை தேடிப் பின் செல்கிறது?

தந்தையும் தாயும்
     தமக்கை அவளும் உடனிருக்க
எத்தனையோ பயணங்களை
     இத்தொடர்வண்டியில் கழித்திருக்க
இன்று மட்டும் ஒரு தனிமை
     ஏனோ இந்த வெறுமை?


கல்வி, பணி நிமித்தம் யென
     எத்தனையோ காரணம் கிடைக்க
பாசம், அன்பை உடன் கொள்ள
     காரணம் ஏன் இல்லாதானது?
உறவுகளை விடுத்து
     மற்றவை முக்கியமாய் போனது?

சுதந்திர காற்றில்
     பறந்திட்ட போதிலும்
ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியில்
     சுவைத்திட்ட போதிலும்
ஏன் இந்த தனிமை
     என் மனதில் சில நேரம்?

வாழ்க்கையின் தேடல்
     விளங்கவில்லை சில சமயம்.
எதனை அடைய வேண்டித்தான்
     வாழ்வினில் இத்தனைத் தியாகம்?
பயன் அறியா லட்சியத்தை
     மனதில் ஏற்ற ஒரு பயணம்.

நான் அமர்ந்த தொடர்வண்டி
     என்னிடம் கேட்ட்து,
தனது வாழ்வில் என்றேனும்
     தன் விருப்பத்தில் வாழ்ந்த்துண்டோ?
பிறரை சேர்விடம் சேர்ப்பதுவே
     வாழ்வானதும் சுகமன்றோ? என்று.

அது உரைத்த்தும் உண்மையே!
     உணர்த்தேன் இறை பதிலெனவே!
கடமையை செய்வதிலும்
     எண்ணிலடங்கா மகிழ்வுண்டு!
காண்பவரேல்லாம் உறவுகளாய் உடனிருக்க
     வாழ்வில் என்றும் சுகமுண்டு!

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...