சனி, 30 ஜூன், 2018
வாழ்வின் பொருள்
எழுந்திடும் சூரியனின்
முதல் ஒளிக்கீற்று தான் பட்டு
உடைந்த கண்ணாடி துண்டொண்டு
ஒளிர்ந்தே இருள் ஒளிந்தது போல்
என் இருள் இதயக் கூட்டினுள்
பொருள் இல்லா வாழ்வு கனக்கையில்
உன் சுவை தேர் பேரன்பின்
சுடரொளி தான் புதுவாழ்வு படைக்கின்றது.
பெருகி எழுந்து சிந்திடும் அப்பேரொளியில்
பெருந்துன்பமும் சுகமன்றோ?
என்னில் சிந்திய இப்பேரன்புத் துளிகள்
எல்லைகள் தகர்க்கும் பெருங்கடலாய்ப்
பெருகி எனை முழுதும் கரைத்தே
தனக்குள் சேர்த்துக் கொள்ளாதோ?
எல்லையில்லா ஆனந்த பரம்பொருளே!
உனில் நிறைவதே என் வாழ்வின் அரும்பொருளே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழியவே
எங்கும் நீராய் படர்ந்திருக்கும் கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய் பரவிக...
-
புத்தாடை உடுத்தி நிற்கும் அந்தி மாலை மேகமே! உன் தோழி பூமி தேவதை சிவந்த ஆடை பூண்டதாலா நீயும் சிவந்த மேனி கொண்டு உன் நட்பைக் காட்டுகிறாய்?...
-
எங்கும் நீராய் படர்ந்திருக்கும் கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய் பரவிக...
-
எழுந்திடும் சூரியனின் முதல் ஒளிக்கீற்று தான் பட்டு உடைந்த கண்ணாடி துண்டொண்டு ஒளிர்ந்தே இருள் ஒளிந்தது போல் என் இருள் இதயக் கூ...
