உன்னிலிருக்கும் அவனே
என்னிலும் இருக்கிறான்.
அவனாகவும் அவளாகவும்
நாமாகவும் வீற்றிருக்கிறான்.
அதுவெனச் சுட்டுமிடத்திலும்
அதன் ஆளம் அமர்ந்திருக்கிறான்.
சுட்டிக்காட்ட இயலாதவண்ணம்
மர்மமாய் மறைந்திருக்கிறான்.
எனினும் அதிசயமாய் அனைத்திலும்
அவன் முகம் காட்டுகிறான்.
புறமெங்கும் தேடுகையில்
என் அகத்துள் அகமாய்,
உயிருக்குள் உயிராய்
ஆன்மாவினுள் கறைந்திருக்கிறான்.
அன்பாய் ஆறுதலாய்,
கனிவாய் காதலாய்,
பெயரறியாத உணர்வுகளாய்
ஊடுறுவித் தாங்குகிறான்.
எங்கும் எதிலும்
மவுனத்திலும் முழக்கத்திலும்
யாவிலும் எல்லையின்றி
படர்ந்து நிறம்பியிருக்கும் அவனை,
அழகாய் பேருண்மையாய்
நன்மையாய் இருந்தே,
யாவையும் இணைத்திடும்
பிளவற்ற ஒருமையாய்,
உயிரோடும் அவனை
என் அகக்கண்கள் காணாதோ?
பேரின்ப வெள்ளத்தில்
கறைந்துருகிட மாட்டேனோ?

