சனி, 26 செப்டம்பர், 2009

மனதில் உறுதி
















மனக் கதவை மூடியிருந்தால்
என்னாளும் தனிமை தான்..
சிறிதேனும் திறந்து பார்த்தால்
கொடுங்காற்றும் தென்றல்தான்..
நட்புக்குள் அடைக்க எத்தெனித்தால்
சீறும் சிங்கமும் தோழன் தான்...
மனதில் உறுதி ஏற்று விட்டால்
பாருலகும் சிறு துரும்பு தான்.

சனி, 12 செப்டம்பர், 2009

ஏழையின் கண்ணீர்



















பூங்காவனச் சோலையிது!
     பொன்னழகு பூமியிது!
நானும் இங்கே
     மனிதனாய் பிறந்தேன்.
வறுமை சேற்றினிலே
     ஏனோ விழுந்தேன்?
பசியோடு தூக்கமே
     வாடிக்கை யானது;
உணவுக்காய் ஏக்கமே
     லட்சியமாய் போனது..
கண்களில் தோன்றிடும்
     உணவு கூட
என் கரம் சேருமா?
     விழியோடு மரையுமா?
என்றே ஏங்குகிறது
     எளியனின் நெஞ்சம்.
ஒரு வேளை சோரில்லாமல்
     ஓராயிரம் நாட்கள்;
கலங்கிய நெஞ்சங்களே
     எங்கள் உறவுகள்.
அடிமை நிலை மாற்றிட
     யார் இங்கு வருவார்?
சமத்துவம் போற்றிட
     யார் இங்கு உழைப்பார்?
நல்லுலகம் மலர்ந்திட
     எங்கள் வாழ்வு செழித்திட
இறைவனின் கருணை தான்
     எங்கள் இல்லம் திரும்புமா? 








வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...