புதன், 31 மார்ச், 2010

யார்?



பால்வண்ணக் கிளிஞ்சலுக்குள்
     முத்தினை வைத்தது யார்?
வான கரு மேகங்களுள்
     கூர் வாள் மின்னலினைச் சேமித்தது யார்?
உன் கருவிழிப் பார்வைக்குள்
     ஈர்ப்பு விசை வைத்தது யார்?
என் இருதயக்கூட்டுக்குள்
     உன் நினைவுகளைத் தைத்தது யார்?

கல்லுளிச் சிற்பியின் கண்ணில்
     கல்லுக்குள் கலைமகளைக் காட்டியது யார்?
பச்சை மர வேருக்கு
     நில நீரின் வழிதனைச் சேர்த்தது யார்?
என் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும்
     நீ என்னவளெனச் சொல்லியது யார்?
உன் அசைவுகள் ஒவ்வொன்றையும்
     காதல் காவியமாய்க் காட்டியது யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...