தொடர்வண்டிப் பயணம்,
மழை பெய்யும் தருணம்,
தனிமையில் சில நிமிடம்
எனக்குள்ளே சில ஞாபகம்.
மரங்கள், வீடுகள், குளங்கள் யென
உலகமே பின்னுக்குத் தள்ளபட
தொடர்வண்டியோ என்னை
முன்னே செலுத்திச் செல்ல
என் மனம் மட்டும் ஏனோ
நினைவுகளை தேடிப் பின் செல்கிறது?
தந்தையும் தாயும்
தமக்கை அவளும் உடனிருக்க
எத்தனையோ பயணங்களை
இத்தொடர்வண்டியில் கழித்திருக்க
இன்று மட்டும் ஒரு தனிமை
ஏனோ இந்த வெறுமை?
கல்வி, பணி நிமித்தம் யென
எத்தனையோ காரணம் கிடைக்க
பாசம், அன்பை உடன் கொள்ள
காரணம் ஏன் இல்லாதானது?
உறவுகளை விடுத்து
மற்றவை முக்கியமாய் போனது?
சுதந்திர காற்றில்
பறந்திட்ட போதிலும்
ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியில்
சுவைத்திட்ட போதிலும்
ஏன் இந்த தனிமை
என் மனதில் சில நேரம்?
வாழ்க்கையின் தேடல்
விளங்கவில்லை சில சமயம்.
எதனை அடைய வேண்டித்தான்
வாழ்வினில் இத்தனைத் தியாகம்?
பயன் அறியா லட்சியத்தை
மனதில் ஏற்ற ஒரு பயணம்.
நான் அமர்ந்த தொடர்வண்டி
என்னிடம் கேட்ட்து,
”தனது வாழ்வில் என்றேனும்
தன் விருப்பத்தில் வாழ்ந்த்துண்டோ?
பிறரை சேர்விடம் சேர்ப்பதுவே
வாழ்வானதும் சுகமன்றோ?” என்று.
அது உரைத்த்தும் உண்மையே!
உணர்த்தேன் இறை பதிலெனவே!
கடமையை செய்வதிலும்
எண்ணிலடங்கா மகிழ்வுண்டு!
காண்பவரேல்லாம் உறவுகளாய் உடனிருக்க
வாழ்வில் என்றும் சுகமுண்டு!

அருமை!!
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு