எங்கும் நீராய் படர்ந்திருக்கும்
கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை
வியந்து சுவைத்து
நனைந்து மகிழ்ந்து
கலந்து நீரோடையாய்
பரவிக் களித்து விளையாடி
துளித்துளியாய் தூயநீர் சேர்த்துப்
பெருகி வளரத் துணைநின்று,
பெருக்கால் கரைவுடைந்து
அழியாத வழிதந்து,
குட்டையாய் தேங்கி
ஆக்கம் இழந்து
வந்த வழி மறந்து
வருந்தி வற்றி
தீமைகள் கலந்து
தூய்மையிழந்து அழியாமல்
வடிகால் பெருகி
தொடர்ந்து உயிர் சேர்த்து
ஊரேங்கும் வழிந்தோட
வளமைகள் வளர்க்க
பெருங்கடல் பேருண்மை நோக்கித்
திருப்பயணம் தொடர்ந்திட
ஊக்கமளித்து உடன்நின்று
எண்ணங்களுக்கு உருவளித்த
சான்றாண்மை தகைய
ஆசிரியர் தமை
புகழ்வதும் போற்றுதலும்
சாலமும் பொருந்துமே.
எங்கள் உள்ளங்கள் வாழ்த்துதே!
அன்பு நிறைந்து மணக்கிறதே!
“வாழியவே இறையொளியில்
வாழியவே நிறைமகிழ்வில் “
என்றே வாயார வாழ்த்துதே!
நன்றிப் பண்ணிசைக்குதே!
