சனி, 3 டிசம்பர், 2011

கண்ணீர்




அத்தனை மணிநேரம்
         காத்து வைத்திருந்தேன் ,
பாழாய்ப் போன வெங்காயம் வந்து
         உடைத்து விட்டது ....

வெள்ளி, 2 டிசம்பர், 2011

எல்லாம் நன்மைக்கே !!




வடித்த சிலையெல்லாம்
    விலைக்குப் போவதில்லை யென
பழகிய சிற்றுளி தன்னை
    விட்டேப் போவதில்லை !
கட்டிய தன் கூடு - காற்றில்
    கலைந்தழிந்தது என்று
எட்டி நின்றே பார்த்து
    குயிலின் கண்கள் வேர்பதில்லை !

கட்டிய நல்லாடை
    கலைந்தது யென்று
ஆடை கட்டவே நாமும்
    நாளும் மறுப்பதில்லை !
முயற்சி செய்தும்
    துயர் தொடர்ந்தது என்று
முயற்சி இன்றியே
    வாழ்வு செழிப்பதில்லை !

தேடிய அன்பு
    மறைந்தது என்று
உயிரில் கலந்த
    அன்பு அழிவதில்லை !
எட்டாத தூரம்
    சென்ற பொழுதும்
உயிரில் வற்றாத நதியென
    நட்பு நிலைக்கும் !

துளிர்விடும் ஒவ்வொரு பொழுதும்
    வாடும் துயரினை மறந்து
நெஞ்சில் உரம் கண்டு
    வேரில் உயிர் சேர்த்து
காலந்தரும் வசந்ததிற்காய்
    மிண்டும் துளிரும் தருணத்திற்காய்
காத்திருக்கும் விதை போல
  காத்திருப்பேன் விழிப்புடனே !

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...