
அழகு கமழும் இயற்கை
அது இறைவன் எழுதிய கவிதை!
குழந்தை பேசும் மழலை
அது மொழியின் கவிதை!
மலர்கள் தரும் நறுமணம்
செடிகள் வடித்த கவிதை!
பறவைகள் செய்யும் ரீங்காரம்
இனிமையின் மறபுக் கவிதை!
பட்டாம்பூச்சியின் நிறங்கள் எல்லாம்
இயற்கை வரைந்த கவிதை!
மண்ணை குளிர்விக்கும் மழையோ
மேகங்கள் பாடிய கவிதை!
அமைதி நிறைந்த உள்ளம்
அவை இன்பந்தரும் கவிதை!
போர்களற்ற அழகு பூமி
அது மனிதத்தின் வெற்றிக் கவிதை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக