வடித்த சிலையெல்லாம்
விலைக்குப்
போவதில்லை யென
பழகிய சிற்றுளி
தன்னை
விட்டேப் போவதில்லை !
கட்டிய தன் கூடு
- காற்றில்
கலைந்தழிந்தது
என்று
எட்டி நின்றே
பார்த்து
குயிலின்
கண்கள் வேர்பதில்லை !
கட்டிய நல்லாடை
கலைந்தது
யென்று
ஆடை கட்டவே நாமும்
நாளும்
மறுப்பதில்லை !
முயற்சி செய்தும்
துயர்
தொடர்ந்தது என்று
முயற்சி இன்றியே
வாழ்வு
செழிப்பதில்லை !
தேடிய அன்பு
மறைந்தது
என்று
உயிரில் கலந்த
அன்பு
அழிவதில்லை !
எட்டாத தூரம்
சென்ற
பொழுதும்
உயிரில் வற்றாத
நதியென
நட்பு
நிலைக்கும் !
துளிர்விடும்
ஒவ்வொரு பொழுதும்
வாடும்
துயரினை மறந்து
நெஞ்சில் உரம்
கண்டு
வேரில்
உயிர் சேர்த்து
காலந்தரும்
வசந்ததிற்காய்
மிண்டும்
துளிரும் தருணத்திற்காய்
காத்திருக்கும்
விதை போல
காத்திருப்பேன்
விழிப்புடனே !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக