
மஞ்சள் அரைத்துப் பூசி
மங்கள முக மலர்ந்த
அழகு நிறைச் சூரியனே
அதற்குள் ஏன் மறைகிறாய்?
கால் பாதம் ம்ண்ணை
தொட்டிடக் கூட நேரமில்லாமல்
என்றும் அலைந்து திரிந்து
பொருள் தேடும் உலகம் போல
நீயும் வேகம் கொண்டு
விரைந்து மறையப் பார்க்கிறாயா?
இல்லை, காலை மாலை யென
எதையும் அறியாமல்
கணிணி முன் முடங்கிக் கிடக்கும்
எனக்கு தான் அப்படித் தோன்றுகிறதா?
நேரத்தை சேமிக்க
கண்டறிந்த கணிப்பொறி
மனிதர் எங்களின்
நேரம் யாவையும் தின்கிறதே!
மணிக்கணக்கின்றி சிறை பிடித்து
என் கனவுகளை களவாடுதே!
அன்னையின் அன்புரு பக்குவத்தால்
சமைத்த நற்சுவை உணவு எங்கே?
அதை நான் அறுந்திட்ட
வசந்த காலம் எங்கே?
இரவு நேரப் பொழுதினிலே
தேச தெய்வ கதைகள் சொல்லி
நெஞ்சில் பக்தியும் ஒழுக்கமும் தந்த
அந்த இனிய தருணங்கள் எங்கே?
அவள் அன்பு வார்த்தை எங்கே?
கனிவு தேற்றல்கள் எங்கே?
அத்தனையும் இன்று அலைபேசி
அலைகளுக்குள் அடங்கிப் போனதேனோ?
தந்தையின் அறிவுரை எங்கே?
அளவில்லா பாசம் எங்கே?
தங்கையின் சிற்சிறு சண்டைகள் எங்கே?
தனக்குள் அவள் கொண்ட பாசம் எங்கே?
வயல்வெளி வரப்புகளில் நடந்து செல்லும்
மகிழ் நிறை காலம் எங்கே?
தென்னந்தொப்பினில் பருகி மகிழ்ந்த
தேன்சுவை இளநீர் எங்கே?
ஞாயிறு திருப்பலிக்கு
உறவினர் யாவரோடும்
எழுந்து மகிழ்ந்து உள்ளம் உவந்து
சென்ற நாட்கள் எங்கே?
மாலை நேர விவிலியப் பள்ளித் தந்த
நற்பாடங்கள் எங்கே?
எங்கள் வீட்டின் முன் நிற்கும்
கொய்யா மரத்தில்
தேடிப் பரித்து உண்ட
அக்கொய்யா கனிகள் எங்கே?
பக்கத்து வீட்டுப் பாட்டி அறியாமல்
அவள் வளர்த்த மாமரத்தில்
பரித்து சுவைத்து மகிழ்ந்த
சுவைதேர் மாங்கனிகள் எங்கே?
வீட்டின் முன் பாய்ந்திடும்
ஆற்று நீரில் குதித்து
நீந்தி குளித்து விளையாடிய
குளிர் தருணங்கள் எங்கே?
ஆளில்லா கடற்கரையில்
அலைகளோடு உறவாடிய
காற்றோடு கவிபாடிய
கால் நனைத்த காலங்கள் எங்கே?
கண்ணீர் துடைத்த
தோழமை எங்கே?
காசுக்கு கிடைக்காத
பாசம் எங்கே?
சிற்சிறு இன்பங்கள் தந்த
அழகு இளமை காலம் எங்கே?
கடல் அளவு அமுத மகிழ்வில்
எனை மறந்த நாட்கள் எங்கே?
எல்லாம் மின்னணுகளுக்குள்
முடங்கிப் போனதே!
மின்னஞ்சல் தொடர்புகளுக்குள்
சுறுங்கிப் போனதே?
உலகை ஆளும் ஏக்கத்தினால்
உண்மை வாழ்வு கனவானதே!
அந்த சுவர்கலோகம் திரும்பிடுமா?
மகிழ்ச்சிக் கடல்தான் ஆட்கொள்ளுமா?
oyyyyyyy.... kavithai kalakkal!!!... ippa utkaandhu padikkum bodhu dhaan muzhumaiyaa experience panna mudiyudhu!!!!..good work
பதிலளிநீக்குhi vada.... nice kavithai...
பதிலளிநீக்கு