வியாழன், 17 ஜூன், 2021

உன்னிலிருக்கும் அவன்

 





உன்னிலிருக்கும் அவனே

            என்னிலும் இருக்கிறான்.

அவனாகவும் அவளாகவும்

            நாமாகவும் வீற்றிருக்கிறான்.

அதுவெனச் சுட்டுமிடத்திலும்

            அதன் ஆளம் அமர்ந்திருக்கிறான்.

சுட்டிக்காட்ட இயலாதவண்ணம்

            மர்மமாய் மறைந்திருக்கிறான்.

எனினும் அதிசயமாய் அனைத்திலும்

            அவன் முகம் காட்டுகிறான்.



புறமெங்கும் தேடுகையில்

            என் அகத்துள் அகமாய்,

உயிருக்குள் உயிராய்

            ஆன்மாவினுள் கறைந்திருக்கிறான்.

அன்பாய் ஆறுதலாய்,

            கனிவாய் காதலாய்,

பெயரறியாத உணர்வுகளாய்

            ஊடுறுவித் தாங்குகிறான்.



எங்கும் எதிலும்

            மவுனத்திலும் முழக்கத்திலும்

யாவிலும் எல்லையின்றி

            படர்ந்து நிறம்பியிருக்கும் அவனை,

அழகாய் பேருண்மையாய்

            நன்மையாய் இருந்தே,

யாவையும் இணைத்திடும்

            பிளவற்ற ஒருமையாய்,

உயிரோடும் அவனை

            என் அகக்கண்கள் காணாதோ?

பேரின்ப வெள்ளத்தில்

            கறைந்துருகிட மாட்டேனோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...